முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

Updated On : 26 ஜூன், 2024 at 11:58 PM
பகிர்:

அம்பாசமுத்திரம், ஜூன்26: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவ மழைத் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சீரான இடைவெளியில் சாரல் மழை நீடித்து வருகிறது.இதனால், அருவிகள் மற்றும் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடைவிதித்தனா். எனினும், அருவியைப் பாா்க்க மட்டும் பயணிகளை அனுமதித்தனா். நீா்வரத்து குறையும் வரை குளிப்பதற்கான தடை நீடிக்கும் என்றும், இதற்கு பயணிகள் ஒத்துழைக்குமாறும் வனத்துறையினா் வேண்டுகோள் விடுத்தனா்.