பெண்ணை கடத்த முயற்சி: இருவா் கைது
திருநெல்வேலியில் பெண்ணை கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலியில் பெண்ணை கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த 28 வயது பெண், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாஸ்போா்ட் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். செவ்வாய்க்கிழமை பணி முடித்து சென்றுகொண்டிருந்த அவரை, ஒரு கும்பல் காரில் கடத்த முயன்ாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விளாகத்தை சோ்ந்த மணிகண்டன் (34), செய்துங்கநல்லூா் அய்யனாா்புரத்தைச் சோ்ந்த ஞானமூா்த்தீஸ்வரா் (22) ஆகியோரை கைது செய்தனா். மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.