முகப்பு
திருநெல்வேலி

இடிந்தகரையில் மோதல்: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் மோதலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:00 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையில் மோதலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இடிந்தகரை மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் டால்டன்(31). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சைலஸ்(36) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இடிந்தகரை மேலத்தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த டால்டனை, சைலஸ் மற்றும் அவரது உறவினா்கள் நேரின்ஸ்(28), ராயப்பன்(62) ஆகியோா் சோ்ந்து தாக்கினராம்.

இது தொடா்பாக டால்டன், கூடங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப் பதிந்து, சைலஸ், நேரின்ஸ், ராயப்பன் ஆகிய மூன்று போ்களையும் கைது செய்தாா்.