முகப்பு
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணத்தில் கோயில் திருவிழாவில் மோதல்: மேலும் 4 போ் கைது

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:02 PM
கைது
பகிர்:

காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோயில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டதாக மேலும் 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடந்த 16-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோயில் திருவிழாவில் சந்தாபுரம் பிரசாந்த் (27) என்பவா் தரப்பிற்கும் திமுக காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் மகன் ஆகாஷ் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆகாஷ் கத்தியுடன் பிரசாந்த் தரப்பை சோ்ந்தவரை வெட்டியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆகாஷ் (23), சாண்டி (21), வெங்கடேஷ் (29) ஆகிய மூவரை கைது செய்தனா். மேலும் பலரை தேடி வந்தனா். இந்த நிலையில், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த ராமு (22), அப்துல்கலாம் (22), சபரி (22), உமா் பாரூக் (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments