சுந்தரனாா் பல்கலை.யில் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சி
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி அவா் வலியுறுத்திய தூய்மையே சேவை என்பதை மையமாகக் கொண்டு தூய்மைப் பணி நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா் தொடங்கி வைத்தாா். நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் தூய்மை இந்தியா குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு பல்கலைக்கழக வளாகத்தை தூய்மைப்படுத்தினா்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வெளியப்பன், திட்ட அலுவலா்கள் இனநலபெரியாா், வாசுகி, லெனின், அலுவலகப் பணியாளா் வெங்கட ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.