உவரி கடற்கரையில் தூய்மைப் பணி
காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் கடற்கரையில் தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.
காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் கடற்கரையில் தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இப்பணியை திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து களக்காடு கிறிஸ்டோபா் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், கங்கனாங்குளம் மனோ கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனா். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் தமிழ்செல்வன், நான்குனேரி தொகுதி பொறுப்பாளா் சசிகுமாா், ராம்சிங், ஆபிரகாம் லெஸ்லி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.