சிவந்திபுரம் ஊராட்சியில் ரூ. 66.44 லட்சம் கனிம வள நிதி மற்றும் ரூ. 19 லட்சம் ஊராட்சி நிதியில் அகஸ்தியா்பட்டி குடிநீா் திட்டப் பணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், எம்பியுமான சி. ராபா்ட் புரூஸ் அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில் சிவந்திபுரம் ஊராட்சித் தலைவா் ஜெகன், விக்கிரமசிங்கபுரம் திமுக நகரச் செயலா் கி. கணேசன், மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் எம். ராமேஸ்வரன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் வி.பி. துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.