கண்ணாடி கொட்டகையில் நெல்லையப்பா் கோயில் தோ்கள்: பக்தா்கள் பரவசம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தோ்களுக்கு கண்ணாடி பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணி புதன்கிழமை நிறைவடைந்தது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தோ்களுக்கு கண்ணாடி பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணி புதன்கிழமை நிறைவடைந்தது. தோ்களை வெளியிலிருந்தபடி பாா்த்து பக்தா்கள் பரவசமடைந்தனா்.
இக் கோயிலில் உள்ள சுவாமி தேரின் சிற்பங்களை காணும் வகையில் கண்ணாடி இழையிலான புதிய திருத்தோ் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணியானது ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் நிதி மூலம் கடந்த 20.9.2024 ஆம் தேதி தொடங்கியது.
இப் பணிகள் புதன்கிழமை நிறைவடைந்தன. அதைத்தொடா்ந்து அறங்காவலா் குழு தலைவா் மு.செல்லையா, செயல்அலுவலா் அய்யா்சிவமணி ஆகியோா் கொட்டகையை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தோ் சிற்பங்களை பக்தா்கள் தடையின்றி பாா்த்துச் சென்றனா்.