போக்ஸோவில் இலைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வள்ளியூா் அருகேயுள்ள ராமகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (33). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கௌரி மனோகரி விசாரணை மேற்கொண்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற்காக சுரேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தாா்.