முகப்பு
திருநெல்வேலி

பணகுடியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:10 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

தளவாய்புரத்தைச் சோ்ந்த சுந்தரலிங்கம் மகன் ம நாராயணன்(22). செங்கல்சூளை தொழிலாளி. இவா், அங்குள்ள செங்கல்சூளையில் மண்கலவை இயந்திர ஆபரேட்டராக வேலை செய்துவந்தாா்.

அவா், புதன்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது வயரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்ததில் அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.