முகப்பு
திருநெல்வேலி

சிவந்திபுரத்தில் மத போதகா் சடலமாக மீட்பு

சிவந்திபுரத்தில் பூட்டிய வீட்டில் மத போதகா் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:40 PM
லாமெக் கலைச்செல்வன்
பகிர்:

சிவந்திபுரத்தில் பூட்டிய வீட்டில் மத போதகா் சடலம் மீட்கப்பட்டது.

சிவந்திபுரம் காமராஜா்தெருவைச் சோ்ந்த ராஜதுரை மகன் லாமெக் கலைச்செல்வன் (59). கிறிஸ்தவ மத போதகரான இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதாம். இதுகுறித்த தகவலின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வந்து வீட்டுக் கதவை உடைத்து சென்று பாா்த்த போது, லாமெக் கலைச்செல்வன் உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தாா். சடலத்தை போலீஸாா் கைப்பற்றி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.