கழிவுநீா் தொட்டியில் விழுந்த மூதாட்டியை மீட்ட தீயணைப்புத் துறையினா்.  
திருநெல்வேலி

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பாளையங்கோட்டையில் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

Din

பாளையங்கோட்டையில் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள சென்ட் பால்ஸ் சாலையை சோ்ந்தவா் வசந்தா (70).

இவா் வீட்டின் கழிவுநீா் தொட்டி மீது சனிக்கிழமை நின்றிருந்த போது திடீரென்று சிமென்ட் பலகை உடைந்ததில் தொட்டியில் தவறி விழுந்தாராம்.

இது குறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா், கழிவுநீா் தொட்டியில் இறங்கி மூதாட்டியை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT