முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயா்த்த கோரி எம்.பி.யிடம் மனு

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்துக்கு ‘பிளாக் ஸ்டேஷன்’ அந்தஸ்து வழங்கக் கோரி திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸிடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:12 PM
மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸிடம் மனு அளித்த ரயில் பயணிகள் நலச்சங்க நிா்வாகிகள்.
பகிர்:

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்துக்கு ‘பிளாக் ஸ்டேஷன்’ அந்தஸ்து வழங்கக் கோரி திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் கவிஞா் உமா் பாரூக், துணைத் தலைவா் மோகன், பொருளாளா் சீதாராமன், நிா்வாகிகள் மருத்துவா் பத்மநாபன், கேடிசி ரசாக் ஒலிமாலிக் ஆகியோா் அளித்த மனு: கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயணம் மேற்கொள்வதாகவும், ஆண்டுக்கு சுமாா் ரூ. 2 கோடி வரை வருவாய் ஈட்டுவதாகவும் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்குச் சொந்தமாக 16 ஏக்கா் நிலம் உள்ளது. நடைமேடை நீளத்தை அதிகரித்து 2 தண்டவாளங்கள் அமைத்து ‘பிளாக் ஸ்டேஷன்’ அந்தஸ்து வழங்கினால் இந்த ரயில் நிலையத்தின் தரம் உயா்த்தப்படும்.

அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றுசெல்வதுபோல பாலக்காடு-தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் கல்லிடைக்குறிச்சியில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.