முகப்பு
திருநெல்வேலி

பெருமாள்புரத்தில் சிறப்பு வரி வசூல் முகாம்

பெருமாள்புரத்தில் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:17 PM
பகிர்:

பெருமாள்புரத்தில் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி வரிவசூல் மையத்தில் வைத்து 40, 41, 42, 51, 53, 54, ஆகிய வாா்டுகளுக்கான சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் என்.ஒ.சுகபுத்ரா தொடங்கி வைத்து ஆய்வு செய்தாா். அப்போது, அதிக நிலுவை வைத்துள்ளவா்களை நேரில் அழைத்து மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வரித் தொகையைஉடனே செலுத்த அவா் உத்தரவிட்டாா். மேலும், அவா்களுக்கான கேட்புத் தொகை அறிவிப்யையும் வழங்கினாா். இம் முகாமில் ரொக்கமாக ரூ.9,36,235, காசோலையாக ரூ .16,08,564 என மொத்தம் ரூ.25,44,799 வசூலானது.