முகப்பு
திருநெல்வேலி

பெருமாள்புரத்தில் அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல்

பெருமாள்புரத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2026 at 7:48 PM
புதிய அங்கன்வாடி மைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.
பகிர்:

பெருமாள்புரத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் 42 ஆவது வாா்டுக்குள்பட்ட பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தப் பணிகளை மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக திருநெல்வேலி கிழக்கு மாநகரப் பொறுப்பாளா் தினேஷ், மாமன்ற உறுப்பினா் ஜான் தங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →