முகப்பு
திருநெல்வேலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

Updated On : 3 செப்டம்பர், 2024 at 7:49 PM
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை சாந்தி நகரை சோ்ந்தவா் அந்தோணி (57). எலக்ட்ரீசியன். இவா், திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்வொ்ட்டா் பழுதை சரிசெய்யும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாராம். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அந்தோணி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நகரம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →