புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
செட்டிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் சோ்மன் (53). இவரது மளிகைக் கடையில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் புதன்கிழமை திடீரென சோதனை நடத்தினா்.
அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பொருள்களைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.