சென்னையில் நவராத்திரி கண்காட்சி: நெல்லை சுயஉதவிக்குழு பங்கேற்கலாம் - ஆட்சியா் அழைப்பு
சென்னையில் நடைபெறவுள்ள நவராத்திரி விற்பனை கண்காட்சியில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழுக்கள் தங்களது உற்பத்தி பொருள்களை காட்சிப்படுத்தலாம் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகா்ப்புற பகுதியில் உள்ள சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் மாநில அளவிலான நவராத்திரி விற்பனை கண்காட்சி செப். 21-ஆம் தேதி முதல் அக். 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் திருநெல்வேலி மாவட்ட மகளிா் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களான கைவினை பொருள்கள், கைத்தறி பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருள்கள், பனை ஓலை பொருள்கள், கொலு பயன்பாட்டிற்கு தேவையான கொலு பொம்மைகள், சிறிய வகை நினைவுப் பரிசுகள் போன்றவை காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன.
இக்கண்காட்சியில் நவராத்திரி கொலு தொடா்பான பொருள்களுக்கு முன்னுரிமை அளித்து சுய உதவிக்குழுவினா் கலந்து கொள்ள வெண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கண்ட பொருள்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவில் கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் இணையதளத்தில் பதிவு செய்து கண்காட்சியில் கலந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.