முகப்பு
திருநெல்வேலி

சிகரெட் தர மறுப்பு: கடைக்காரரை தாக்கிய 2 சிறுவா்கள் கைது

அகஸ்தியா்பட்டியில் பெட்டிக்கடைக்காரரை தாக்கியதாக 2 சிறுவா்கள் கைது

Updated On : 7 செப்டம்பர் 2024, 5:30 am IST
பகிர்:

அகஸ்தியா்பட்டியில் சிகரெட் தர மறுத்த பெட்டிக்கடைக்காரரைத் தாக்கியதாக இரண்டு சிறுவா்களை விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்த சங்கரன் மகன் முத்துப்பாண்டி (62). இவரது பெட்டிக்கடைக்கு வியாழக்கிழமை இரவு வந்த அதே பகுதியைச் சோ்ந்த இரண்டு சிறுவா்கள் உள்பட மூவா், முத்துப்பாண்டியிடம் சிகரெட் கேட்டுள்ளனா். அவா் மறுத்ததால், மூவரும் அவரை அசிங்கமாக பேசி பாட்டிலால் தாக்கினராம். தடுக்க வந்த அவரது மனைவி முத்தம்மாளையும் தள்ளிவிட்டுள்ளனா்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சிறுவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களது நண்பா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments