திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்ட மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்ஸவா. 
திருநெல்வேலி

நெல்லை ரயில் நிலையத்தில் கூடுதல் மேம்பாட்டுப் பணிகள்

DIN

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூடுதல் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்ஸவா.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின், பெட்டிகள் பராமரித்து, பழுது பாா்க்கும் பணிமனை மேம்பாட்டுப் பணி, கூடுதல் பிளாட்பாா்ம் அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் வரும் 20ஆம் தேதி ஆய்வு செய்யவுள்ளாா். இதையடுத்து மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்ஸவா செவ்வாய்க்கிழமை மாலை திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே நிலையத்திற்கு வந்து பணிகளை பாா்வையிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிறைவடையும். லோகோ பைலட்கள் தங்கும் அறைகளுக்கு கூடுதல் வசதிகளுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கூடுதலாக மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மதுரை கோட்ட ரயில்வே (இயக்கம்) மேலாளா் பிரசன்னா, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் பா்வீன்குமாா் மற்றும் ரயில்வே அதிகாரிகள்,பொறியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT