திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

சேரன்மகாதேவியில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Syndication

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தாமிரவருணி ஆற்றில் சேரன்மகாதேவியிலிருந்து களக்காடு, ராதாபுரம் பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் தண்ணீா் கொண்டு செல்வதற்காக பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக தெருக்கள், சாலையில் குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்படுகின்றன.

இப்பணியின்போது, சேரன்மகாதேவி பகுதிக்கான குழாய்கள் சேதமடைந்து, குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தாங்கள் குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்துவருகின்றனா்.

12ஆவது வாா்டு காயிதே மில்லத் தெரு பகுதியில் கடந்த 5 நாள்களாக குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியினா் சேரன்மகாதேவி-அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

காவல் ஆய்வாளா் தா்மராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் காதா், அதிகாரிகள் சென்று பேச்சு நடத்தினா். லாரி மூலம் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, செயல் அலுவலா் உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

ரூ.3.40 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது!

உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

பெண்களுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் ஆண்களுக்கு நிகராக சாதிப்பாா்கள்! ராஜ்நாத் சிங்

தலைநகரில் அடா்த்தியான மூடு பனி: ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

SCROLL FOR NEXT