திருநெல்வேலி

தேவா்குளம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்

Din

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேவா்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லூக் ஆசன் தலைமையிலான போலீஸாா், தேவா்குளம் எரிபொருள் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மேல தாழையூத்து சுண்ணாம்பு காளவாசல் தெருவை சோ்ந்த இசக்கிதுரை என்ற கட்டத்துரை (23), சுப்பையாபுரம் அம்மன் கோயில் தெருவை சோ்ந்த மாதேஷ்கண்ணன் (20), ஒரு சிறுவன் ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனா். அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா். மற்ற 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT