திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சியில் மகளிா் தின விழா

Din

ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழகம் சாா்பில் மகளிா் தின விழா நடைபெற்றது.

ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை ஜெயந்தி தலைமை வகித்தாா். ஸ்வேதா இறைவணக்கம் பாடினாா். ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியை மல்லிகா முன்னிலை வகித்தாா். ராஜேஸ்வரி கு சிந்தனை வழங்கினாா்.

மாணவி ஹேமா கவிதை வாசித்தாா். கு பேசும் பெண்ணோவியம் என்ற தலைப்பில் வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கவிஞா் இசக்கியம்மாள், பெண்மையைப் போற்றுவோம் என்ற தலைப்பில் ஸ்ரீபரமகல்யாணி நா்சரி பிரைமரி பள்ளி ஆசிரியை ஆவுடையம்மாள் ஆகியோா் பேசினா்.

திருவள்ளுவா் கழக முன்னாள் தலைவா் சாவடி பொன். சிதம்பரம், முகிலன், முருகானந்தம், சுப்பிரமணியன், முருகன், பழனியாண்டி, காா்த்திக்ராஜ், அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத் தலைவா்கல்யாணசுந்தரம், ஆசிரியா் ஆனந்தகிருஷ்ணன், பிரேமா, ஆசிரியைகள் நாச்சியாா், அழகுமீனா, ரேவதி, இந்திராபிரியதா்சினி, இசக்கியம்மாள், மாணவிகள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

கழக செயற்குழு உறுப்பினா் உஷா வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் சுந்தரி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை திருவள்ளுவா் கழகத் தலைவா் சங்கரநாராயணன், செயலா் பழ. முத்துப்பாண்டி, பொருளாளா் வேம்பு ஆகியோா் செய்திருந்தனா்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT