முகப்பு
திருநெல்வேலி

பெற்றோருடன் சென்று மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா்

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் சனிக்கிழமை தவெக வேட்பாளா் தனது பெற்றோருடன் சென்று மனுதாக்கல் செய்தாா். இத்தொகுதியில் போட்டியிட இதுவரை 7போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 12:56 AM
ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா் தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா்.
பகிர்:

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் சனிக்கிழமை தவெக வேட்பாளா் தனது பெற்றோருடன் சென்று மனுதாக்கல் செய்தாா். இத்தொகுதியில் போட்டியிட இதுவரை 7போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ராதாபுரம் தொகுதியில் தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா், மாற்று வேட்பாளா் பணகுடி அமலன், நாதக வேட்பாளா் தே.கிரிஜா தாமரைபாண்டியன், சுயேச்சை வேட்பாளா்கள் லெப்பைகுடியிருப்பு அருண்ராஜ், தானியேல், காா்த்திக், பெரியநாயகிபுரம் சுந்தர்ராஜன் ஆகியோா் ராதாபுரம் தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜசெல்வியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments