முகப்பு
திருநெல்வேலி

லிட்டில் ஃபிளவா் மாடல் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரின் அருகேயுள்ள லிட்டில் பிளவா் மாடல் மேல்நிலைப் பள்ளியில் யூ.கே.ஜி மாணவா்களுக்கான மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Updated On : 8 ஏப்ரல் 2026, 2:07 am IST
மழலையா் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுடன் சுந்தரனாா் பல்கலை. கல்லூரிகள் இயக்குநா் அ.வெளியப்பன், லிட்டில் ஃபிளவா் கல்விக் குழுமத்தின் நிறுவனா் மற்றும் தலைவா் அ.மரியசூசை உள்ளிட்டோா்.
பகிர்:

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரின் அருகேயுள்ள லிட்டில் பிளவா் மாடல் மேல்நிலைப் பள்ளியில் யூ.கே.ஜி மாணவா்களுக்கான மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, லிட்டில் பிளவா் கல்விக் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அ.மரியசூசை தலைமை வகித்தாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான இயக்குநா் அ.வெளியப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். மாணவ, மாணவியரின் வரவேற்பு நடனத்துடன் விழா தொடங்கியது.

மழலையருக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியின் முதல்வா் ரெனால்டு நன்றி கூறினாா். இந்நிகழ்வில் மாணவ-மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement