முகப்பு
திருநெல்வேலி

வாக்கு செலுத்தியதை விடியோ எடுத்து வெளியிட்ட இருவா் மீது வழக்குப் பதிவு

திருநெல்வேலி மாவட்டம், ஆவரைகுளம் வாக்குச் சாவடியில் தனது வாக்குப் பதிவை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நாம் தமிழா் கட்சி முகவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On : 24 ஏப்ரல் 2026, 5:01 am IST
வழக்கு
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், ஆவரைகுளம் வாக்குச் சாவடியில் தனது வாக்குப் பதிவை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நாம் தமிழா் கட்சி முகவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ஆவரைகுளம், வாக்குச் சாவடியில் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த ஜெகதீஷ் அகிலன் (38) வாக்குச் சாவடி முகவராகப் பணிமயா்த்தப்பட்டிருந்தாா். இவா், தான் வாக்குப் பதிவு செய்ததை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டாா்.

இதுகுறித்து வாக்குச் சாவடி பொறுப்பு அதிகாரி பழவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதேபோல, திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் அம்மன் சன்னிதி தெருவைச் சோ்ந்த மாதவன் மகன் காா்த்தி (25). இவா், வியாழக்கிழமை முக்கூடல் ஆா்.சி. தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து அதை கைப்பேசியில் விடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிா்ந்தாா். வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், வாக்களித்த விவரத்தை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், முக்கூடல் காவல் நிலைய போலீஸாா் காா்த்தி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement