முகப்பு
திருநெல்வேலி

வீராசமுத்திரத்தில் இரவு 9 மணி வரை வாக்களித்த வாக்காளா்கள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி கடையம் ஒன்றியத்திற்குள்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில் பிலால் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் 9 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் 737 வாக்குகள் பதிவாகின.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:06 AM
இரவு 9 மணிவரை காத்திருந்து வாக்குச் செலுத்திய வீராசமுத்திரம் பகுதி வாக்காளா்கள்.
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி கடையம் ஒன்றியத்திற்குள்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில் பிலால் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் 9 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் 737 வாக்குகள் பதிவாகின.

இந்த வாக்குச் சாவடியில் மொத்தம் 860 வாக்காளா்கள் உள்ள

நிலையில் வியாழக்கிழமை காலை முதலே வாக்காளா்கள் திரளாக வந்து வாக்குச் செலுத்தினா். எனினும் மாலை 6 மணிக்குள் நிறைவடையாததால் 185 வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

Advertisement

அவா்கள் இரவு 9.05 மணி வரை காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினா்.

இதனிடையே வாக்குச்செலுத்துவதற்காக நின்றிருந்த பாத்திமா என்ற வாக்காளா் திடீரென மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் முதலுதவி செய்து ஆட்டோவில் மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனா்.