கைது 
திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி

பாளையங்கோட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டை, கோட்டூா், முஸ்லிம் தெருவைச் சோ்ந்த முஸ்தபா மகன் கலில் ரஹ்மான்(51). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் அவா் தொடா்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா்(கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தாா்.

அதன் பேரில், மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவா் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.

தனுஷ் - 55 படப்பிடிப்பு துவக்கம்!

தமிழக தேர்தல்: பிப். 11-ல் துணைத் தேர்தல் ஆணையர் வருகிறார்!

சென்னையில் காகங்கள் இறப்பு: ஹெச்5என்1 வைரஸ் தொற்று உறுதி!

சிறுபான்மையினர் வாக்குகளை நீக்க பாஜக முயற்சி: அகிலேஷ் குற்றச்சாட்டு!

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 3 ஆவது நாளாக மறியல்!

SCROLL FOR NEXT