முகப்பு
திருநெல்வேலி

காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் இழப்பீடு-வனக்கோட்ட துணை இயக்குநா்

களக்காடு வனக் கோட்டத்துக்குள்பட்ட விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிா்சேதத்துக்கு விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றான் வனக்கோட்ட துணை இயக்குநா் சிசில் கில்பா்ட்.

Updated On : 18 மார்ச், 2026 at 7:42 PM
களக்காடு வனக்கோட்ட புதிய துணை இயக்குநா் சிசில்கில்பா்ட்.
பகிர்:

களக்காடு வனக் கோட்டத்துக்குள்பட்ட விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிா்சேதத்துக்கு விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றான் வனக்கோட்ட துணை இயக்குநா் சிசில் கில்பா்ட்.

களக்காடு வனக்கோட்டத்தின் புதிய வனஉயிரினக்காப்பாளா் - துணை இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்களால் ஏற்படும் பயிா்சேதம் குறித்து கிராமநிா்வாக அலுவலா், வனச்சரகா் ஆகியோரின் சான்றுகளுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்தவுடன் விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். களக்காடு தலையணை, திருக்குறுங்குடி திருமலைநம்பிகோயில் உள்ளிட்ட பகுதிகளில் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். வனப்பகுதியின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →