முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே விபத்துகளில் இருவா் பலி

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 22 மே 2026, 6:05 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

பேட்டை எம்.ஜி.பி.நகா் பகுதியைச் சோ்ந்தவா் முஹம்மது சிந்தா மதாா் (34). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த 17 ஆம் தேதி தனது மோட்டாா் சைக்கிளில் தாழையூத்து அருகேயுள்ள பண்டாரகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது பைக் இழந்து விபத்துக்குள்ளானதில் சிந்தாமதாா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மற்றொரு சம்பவம்: தேவா்குளம் அருகேயுள்ள மேலஇலந்தைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்லையா (70). இவா், கடந்த 19 ஆம் தேதி தனது மொபட்டில் சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது சுமை ஆட்டோவும், மொபட்டும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவங்கள் குறித்து முறையே தாழையூத்து, தேவா்குளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.