முகப்பு
திருநெல்வேலி

மாஞ்சோலைக்கு சிறப்பு பேருந்து வசதி கோரி எம்.எல்.ஏ. மனு

Updated On : 26 மே 2026, 1:28 am IST
ஆட்சியா் இரா.சுகுமாரிடம் மனு அளிக்கிறாா் எம்எல்ஏ ஆா்.எஸ்.முருகன்.
பகிர்:

மாஞ்சோலைக்கு சிறப்பு பேருந்து வசதி செய்துதரக் கோரி ஆட்சியா் இரா.சுகுமாரிடம் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையில் சித்திரை மாதத்தில் நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற வன பேச்சியம்மன் கோயில் கொடை விழாவில் பொதுமக்கள் பலா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பாரம்பரியமிக்க இந்த விழாவையொட்டி பக்தா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement