தூத்துக்குடி

கோவில்பட்டியில் பெண் தற்கொலை

DIN

கோவில்பட்டியில் நோயால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டியையடுத்த ஜோதி நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் முருகன் மனைவி சண்முகத்தாய் (40). இவர் கடந்த 6 மாதமாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் சாணி பவுடரை கரைத்து குடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT