தூத்துக்குடி

தென்திருப்பேரை அருகே கோயில் மண்டல பூஜை நிறைவு

DIN

தென்திருப்பேரை அருகே உள்ள கோட்டூர் அருள்மிகு உமையாள் உடனுறை அருள்மிகு குறுஈஸ்வரமுடையார் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் ரூ.15 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஜூன் 25ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற்றன. மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு சனிக்கிழமை 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மகா ருத்ர யாகம், மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றன. நிகழ்ச்சியில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், சென்னை தொழிலதிபர் நாராயண சுவாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல் கட்டம் 66.14%, 2-ஆம் கட்டம் 66.71% வாக்குப் பதிவு

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT