தூத்துக்குடி

வனத் துறை சார்பில் விருது பெற்ற ரோட்டரி உறுப்பினருக்கு பாராட்டு

DIN

தமிழ்நாடு வனத் துறை சார்பில் மரப்பயிர் வளர்த்தோருக்கான விருது பெற்ற ரோட்டரி சங்க உறுப்பினர் ராமமூர்த்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டத் தலைவர் விநாயகா ஜி.ரமேஷ்,  தொழிலதிபர்கள் ரத்தன் டாகா,  கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வனத் துறை சார்பில் 2016-17ஆம் ஆண்டிற்கான மரப்பயிர் வளர்த்தோருக்கான விருது பெற்ற ரோட்டரி சங்க உறுப்பினர் எஸ்.ராமமூர்த்தியைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்,  ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த ஷேக்சலீம்,  மாவட்ட துணை ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி,  முன்னாள் துணை ஆளுநர் சீனிவாசன்,  முன்னாள் தலைவர்கள் தன்ராஜ்ராஜா,  நாராயணசாமி,  பரமேஸ்வரன்,  வீராச்சாமி, லட்சுமணப்பெருமாள்,  செளந்தர்ராஜன் உள்பட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT