சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் கொடுத்தல் மகிழ்ச்சி வார விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் கருணா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியையொட்டி, பள்ளி மாணவர், மாணவிகளிடமிருந்து பேனா பென்சில் உள்ளிட்ட எழுது பொருள்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் பெறப்பட்டன.
அவற்றை பள்ளி முதல்வர் ஆர்.சண்முகானந்தன், ஆசிரியர் ஸ்டீபன் பாலாசிர், கருணா சங்க ஆசிரியை அன்சலா, ராம்பிரபு, துணை முதல்வர் வனிதா வி.ராயன் மற்றும் மாணவர் மாணவிகள் வரண்டியவேல் இந்து நடுநிலைப் பள்ளி, தெற்கு ஆத்தூர் பார்வதி இந்து தொடக்கப்பள்ளி, தலைவன்வடலிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆறுமுகனேரி செல்வராஜபுரம் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளி, வாலவிளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இந்து சரஸ்வதி நடுநிலைப் பள்ளி மற்றும் பூவரசூர் டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளி மாணவர், மாணவிகளிடம் வழங்கினர்.