தூத்துக்குடி

முன்னாள் பேராயர் பீட்டர் பெர்னாண்டோ உடல் அடக்கம்: அமைச்சர் அஞ்சலி

DIN

மதுரை மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர் பெர்னாண்டோவின் உடல் தூத்துக்குடியில் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
பீட்டர் பெர்னாண்டோ உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 31 ஆம் தேதி மதுரையில் காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் தூத்துக்குடியில் உள்ள சின்னக்கோயில் என அழைக்கப்படும் திருஇருதய பேராலய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 15 கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அருட்தந்தைகள் கலந்துகொண்டனர்.
பீட்டர் பெர்னாண்டோவின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்), ஐ.எஸ். இன்பதுரை (ராதாபுரம்), அதிமுக மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT