தூத்துக்குடி

பேட்மாநகரத்தில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

DIN

பேட்மாநகரத்தில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் பாலம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  பேட்மாநகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியன உள்ளதால் இங்குள்ள  பேருந்து நிறுத்தத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும்.
  இப் பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலம் வழியாக வாகைகுளம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் மட்டும் இன்றி பத்மநாபமங்கலம் பகுதியில் செயல்படும் கல்குவாரிகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. மேலும், ஏரல் வழியாக தூத்துக்குடி செல்லும் வாகனங்களும் இந்த வழியாகதான் வந்து செல்கின்றன.
  மூன்று சாலைகள் இணையும் இடத்தில் பேருந்து நிறுத்தம் உள்ள நிலையில், இப்பகுதியில் வேகமாக வந்து செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே, விபத்தினால் உயிர் சேதங்கள் ஏற்படாமல் தடுத்திட பேருந்து நிறுத்தம் அருகே   உள்ள மூன்று சாலைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT