தூத்துக்குடி

நாசரேத், கோவில்பட்டியில் 19 பவுன் நகை திருட்டு

DIN

கோவில்பட்டி, நாசரேத் பகுதியில் 19 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாசரேத், உடையார்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்(34). தொழிலாளி. இவரது மனைவி விஜயசுந்தரி(32). இத்தம்பதிக்கு 7 மாத கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 பேரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர், வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே குதித்து விஜயசுந்தரி கழுத்தில் அணிந்திருந்த ரூ. 1 லட்சம் பெறுமான 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாராம்.  இதுகுறித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் மீனா வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
கோவில்பட்டி, நடராஜபுரம் 4ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராமராஜன் மனைவி தங்கமாரி(27). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் கிரேஸ்(70) என்பவரும் கடந்த மாதம் 19ஆம் தேதி தனது 14 பவுன் நகையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு திருநெல்வேலியையடுத்த தாழையூத்துக்குச் சென்றார்களாம்.
அங்கு சென்று பார்த்தபோது பையில் இருந்த நகையைக் காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT