தூத்துக்குடி

கயத்தாறில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

DIN

கயத்தாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கிவைத்தார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தலைமை வகித்து பேசுகையில், மாவட்டத்தில் 958 ரேஷன் கடைகளில் 4,24,878 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1.91 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ், தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் மாணிக்கராஜா, கயத்தாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுடலை, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆரோக்கியகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி பொது கூட்டுறவு பண்டக சாலையில், அதன் தலைவர் ராமர், பாண்டவர்மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உள்பட்ட ரேஷன் கடைகளில் அதன் தலைவர் அன்புராஜ் ஆகியோர் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT