சாத்தான்குளம் அருகே கிணற்றில் கிடந்த முதியவர் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள விவிநகரில் ஒரு தோட்டத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தட்டார்மடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் பொன்னுச்சாமி தலைமையிலான போலீஸார் சென்று அவரது சடலத்தை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தியதில் அவர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை சண்முகபுரத்தைச் சேர்ந்த ரா. பேச்சிமுத்து (80) என தெரியவந்தது. மனைவி இறந்து போனதால் பேச்சிமுத்து தனியாக இருந்து வந்தாராம்.
இந்நிலையில் விவிநகரில் உள்ள தோட்டத்துக்குச் சென்றபோது கிணற்றில் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.