தூத்துக்குடி

லாரி ஓட்டுநருக்கு மிரட்டல்: இருவர் கைது

DIN

கோவில்பட்டியில் லாரி ஓட்டுநரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக இரு ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர்.
பரமக்குடி வசந்தபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த சின்னையா மகன் அலிராஜா (41). லாரி ஓட்டுநரான இவர், கோவில்பட்டி புறவழிச் சாலையில் இந்திரா காலனி அருகே அணுகுசாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது அவரை வழிமறித்து பணம் தருமாறு கத்தியைக் காட்டி இருவர் மிரட்டல் விடுத்தனராம்.
இது குறித்து அலிராஜா அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸார் இருவரையும் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வடக்குத் திட்டங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் (25) மற்றும் காந்தி நகர் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ம.ஆறுமுகப்பாண்டி (31) என்பது தெரியவந்தது.
அதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT