கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் அய்யலுசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் ராஜாமணி, பிச்சையா, இணைச் செயலர் சுப்புராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் கேசவன் கூட்ட அறிக்கையையும், பொருளாளர் ராஜையா வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தொடர்ந்து, புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர், சங்க உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஓய்வூதியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்க உறுப்பினர் சுந்தரம் வரவேற்றார். கருப்பசாமி நன்றி கூறினார்.