புன்னைக்காயல் கடலில் தவறி விழுந்து மீனவர்இறந்தார்.
புன்னைக்காயல் தெற்கு தெருவைச் சேர்ந்த அந்தோனி மகன் பிரான்சிஸ் (40). மீனவரான இவர் தனது விசைப் படகில் 7 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்க திங்கள்கிழமை சென்றுள்ளார். அன்று இரவு நடுக்கடலில் திடீரென வீசிய காற்றில் பிரான்சிஸ் கடலுக்குள் தவறி விழுந்தாராம். தகவலறிந்து புன்னைக்காயலிலிருந்து வந்த மீனவர்கள் பிரான்சிஸை காப்பாற்ற முயன்றனர்.அ தற்குள் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து தூத்துக்குடி தருவைக்குளம் கடலோர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.