தூத்துக்குடி

கோவில்பட்டியில் திருடச் சென்ற வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

DIN

கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட சென்ற மர்ம நபர்கள் பொருள்கள் ஏதும் கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
கோவில்பட்டி இனாம்மணியாச்சி, சீனிவாசன் நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்தவர் அ. சுப்பையா (70). ஓய்வுபெற்ற நூற்பாலை தொழிலாளி. இவர், குடும்பத்தினருடன் கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருப்பதிக்குச் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், இவரது வீட்டின் உள் பகுதியிலிருந்து புதன்கிழமை அதிகாலை திடீரென புகை எழுந்ததாம். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் செல்லிடப்பேசி மூலம் சுப்பையாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கோவில்பட்டி சாஸ்த்ரி நகர் இ.பி. காலனியில் குடியிருந்து வரும் சுப்பையாவின் மருமகள் ரா. சங்கீதா (32)  வந்து வீட்டை பார்த்தபோது, வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அவர், உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை திறந்து பார்த்து, உள்ளே எந்த பொருள்களும் இல்லாததால் அதில் இருந்த துணி மற்றும் ஆவணங்களை கீழே தள்ளி தீ வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. தகவல் தெரிந்தவுடன் தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் பொருள்கள் தீயில் கருகி நாசமாயின.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT