தூத்துக்குடி

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக இளைஞர் கைது

DIN

சாத்தான்குளம் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
 சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ராமச்சந்திரன் (50) பணிபுரிந்து  வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை படுக்கப்பத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டபோது படுக்கப்பத்து - செட்டிவிளை செல்லும் சாலையில் அதிசயபுரத்தைச் சேர்ந்த தா. சுமித் (26), க.ஜெகன் (24), கோ. ஜெபஸ்டின் மற்றும் பெரியதாழையைச் சேர்ந்த இருவர் என 5 பேர் மது அருந்தினராம். இதனை ராமச்சந்திரன் கண்டித்தாராம். அப்போது உதவி ஆய்வாளருக்கும், மது அருந்தியவர்களுக்குமிடையே ஏற்பட்ட தகராறில் சுமித் உள்ளிட்ட 5பேரும் சேர்ந்து ராமச்சந்திரனை கல்லால் தாக்கிவிட்டு ஓடிவிட்டனராம். இதில் காயமுற்ற அவர்  சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 இதுகுறித்த புகாரின் பேரில்  தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பொன்னுச்சாமி  வழக்குப் பதிந்து ஜெபஸ்டினை கைது செய்தார். இது தொடர்பாக மேலும்  4 பேரை போலீஸார்   தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT