தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் நூல், ஆவணப்படம் வெளியீட்டு விழா

DIN

இசைமேதை ஸ்ரீலஸ்ரீ நல்லப்பசுவாமிகளின் 52ஆவது ஆண்டு இசை ஆராதனை விழா மற்றும் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நூல், ஆவணப்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் புதுச்சேரி பா. செயப்பிரகாசம், எட்டயபுரம் இளசைமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லப்பசுவாமிகள் கலை இலக்கிய இசை மன்றப் பொறுப்பாளர் இளையராஜா மாரியப்பன் வரவேற்றார்.
விழாவில், நல்லப்ப சுவாமிகள் ஜீவ சமாதி அமைவிடத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இசை அஞ்சலி நடைபெற்றது. தொடர்ந்து விழா மேடையில் நல்லப்பசுவாமி திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், நல்லப்பசுவாமிகளின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் வெளியிட, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக அவைத்தலைவர் மு. சங்கரவேலு பெற்றுக்கொண்டார். நல்லப்பசுவாமிகளின் ஆவணப்படத்தை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் வெளியிட, மதுரை தியாகராஜர் கல்லூரியின் முதன்மை இசை ஆய்வாளர் நா. மம்மது, வேம்பு தொண்டு நிறுவன இயக்குநர் பங்குத்தந்தை லாரன்ஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நூல் தொகுப்பு ஆசிரியர் என்.ஏ.எஸ். சிவகுமார், ஆவணப்பட இயக்குநர் சி. மகேந்திரன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
விழாவில், வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல் வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய துரை, நல்லப்பசுவாமிகளின் வழித்தோன்றல் பி. பால்ராஜா, கலைமாமணி கைலாசமூர்த்தி, கலைவளர்மணி இசக்கியப்பன், கவிஞர் மா. மேனன், நல்லப்ப சுவாமிகள் இசைக்குழு பொறுப்பாளர் பி. சென்னையன், எட்டயபுரம் பரமானந்தம், பேராசிரியர் சங்கரராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நல்லப்பசுவாமிகள் இசைக்குழுத் தலைவர் துரை அரசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT