தூத்துக்குடி

நாசரேத்தில் ஒப்பந்ததாரர் வீட்டில் ஜீப் திருட்டு

DIN

நாசரேத்தில் கட்டட ஒப்பந்ததாரர் வீட்டில் நிறுத்தியிருந்த ஜீப்பை திருடிச்சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாசரேத் கொர்நேலியஸ் தெருவைச் சேர்ந்தவர் இன்பராஜ் (60). கட்டட ஒப்பந்ததாரர்.  இவர் வியாழக்கிழமை தனது ஜீப்பை வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்தார். அவர் வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது, அங்கிருந்த ஜீப்பை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் மீனா வழக்குப் பதிந்தார். ஆய்வாளர் ரேணியஸ் ஜேசு பாதம் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT