தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

DIN

அங்கன்வாடி பணி நியமனத்தில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்தும், பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரியும் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகத்சிங் மன்றத்தின் சார்பில்  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  உறுப்பினர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். தேவி முன்னிலை வகித்தார்.   மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் பணி நியமனத்தில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்தும், பணி நியமன கலந்தாய்வை உடனடியாக மீண்டும் நடத்த வலியுறுத்தியும், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு பணி நியமனத்தில் முறையாக முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.
விவசாய சங்க மாவட்டத் தலைவர் சீத்தாராமன்,  உறுப்பினர்கள் பாண்டியராஜன், சுந்தரி, கணேசன், ரமேஷ்கண்ணா, சிங்காரவேலு, கொம்பையா, கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT