ஆறுமுகனேரியில் சாரல் மழை
ஆறுமுகனேரியில் திங்கள்கிழமை காலை சாரல் மழை பெய்தது.
ஆறுமுகனேரியில் திங்கள்கிழமை காலை சாரல் மழை பெய்தது.
ஆறுமுகனேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை சிறிது நேரம் பெய்த சாரல் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இம் மழையின் காரணமாக ஆறுமுகனேரி அடுத்துள்ள மூலக்கரையில் காலையில் நடைபெற வேண்டிய நெற்பயிர் அறுவடை பிற்பகலில் நடைபெற்றது.