விளாத்திகுளம் அருகே விவசாயியை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு
விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில் நிலத் தகராறில் விவசாயியை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில் நிலத் தகராறில் விவசாயியை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் கடற்கரை மகன் சண்முகவேல் (60). இவர் தற்போது தூத்துக்குடியில் வசித்து வருகிறார். ராமச்சந்திராபுரத்தில் உள்ள இவருடைய விவசாய நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சிலர் போலி ஆவணங்களை தயார்செய்து ஆக்கிரமித்திருந்தனராம்.
இதையறிந்த சண்முகவேல், ராமச்சந்திராபுரத்துக்கு சென்று தன்னிடம் உள்ள ஆவணங்களை காட்டி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தினாராம். அப்போது ஏற்பட்ட தகராறில், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ், செந்தூர், முருகானந்தம், மையில்ராஜ் ஆகிய 4 பேர் சேர்ந்து சண்முகவேலை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சண்முகவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தாக்கியதாகக் கூறப்படும் 4 பேர் மீதும் விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.